துறையினைப் பற்றி
தமிழ்த் துறையில் நான்கு பேராசிரியப் பெருமக்களும், சுயநிதிப்பிரிவில் இரு பேராசிரியப் பெருமக்களும் ஆக அறுவர் பணியாற்றுகின்றனர்.
- துறைத்தலைவர் முனைவர். கஸ்தூரி ஜான்சன் அவர்கள் 31-05-2009 அன்று ஓய்வு பெற்று விட்டமையால், முனைவர். அ. தனலெட்சுமி அவர்கள் 01-06-2009 முதல் துறைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
- தமிழ்த் துறையில் பகுதி- 1 தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது.
பேராசிரியப் பெருமக்கள்
- முனைவர். கஸ்தூரி ஜான்சன் அவர்கள் 10-07-1975 முதல் 31-05-2009 வரை
- திருமதி. கர. பெத்தனாக்சி மதுமிதா, 22-06-2009 முதல்
View Profile
சுயநிதிப் பிரிவு விரிவுரையாளர்கள்
ஆசிரியர்களின் பணி
- பகுதி 1 தமிழில் 100 சதவிகித தேர்ச்சி
- பாடத்திட்டத்தை மாற்றி அவ்வப்போது புதிய பாடங்களை இணைத்தல்
- மாதத் தேர்வுகளில் குறைவாக மதிப்பெண் பெறும் மாணவிகளுக்கு மறுதேர்வு வைத்து ஊக்கப்படுத்துதல்
- பல்வேறு தலைப்புகளில் அவ்வப்போது கருத்தரங்குகள் நடத்துதல்.
- ஆண்டுதோறும் இலக்கிய மன்றக்கூட்டம் நடத்துதல்.
- மாதத்திற்கு இரண்டு முறை துறைக்கூட்டம் நடத்தப்பட்டு துறையின் செயல்பாடுகள் குறித்து விவாதித்தல்.
மாணவிகள் சார்பான பணிகள்
- மாணவிகளிடையே மறைந்து கிடக்கும் பேச்சாற்றலையும், எழுத்தாற்றலையும், கல்வியாற்றலையும் தூண்டி வெளிக்கொணரும் விதமாக கல்லூரி அளவிலும் மாவட்ட அளவிலும் காமராஜர், அண்ணா, கண்ணதாசன் பிறந்தநாள் விழா, சுதந்திர தின விழா, பொங்கல் விழா ஆகியவற்றையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்துதல், பரிசு வழங்குதல்.
- வெளியிடங்களில் நடைபெறும் பேச்சு, கட்டுரை, ஒப்பித்தல் போட்டிகளுக்கு மாணவிகளைத் தயார் படுத்தி அனுப்பி வைத்தல்.
- மாணவிகளின் பல்வேறு படைப்புகளைக் கொண்டு பருவத்திற்கு ஒருமுறை ”தமிழோசை” 9 இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன.
- மாணவிகளின் திறன்களை வெளிப்படுத்தும் வகையிலும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலும் மாணவிகளை உள்ளுர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குத் தொகுப்பாளர்களாக மாணவிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்புதல்
ஆசிரியர்களின் சாதனை
- தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் பல்வேறு இடங்களில் நடைபெறும் உலக தேசிய அளவிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு கட்டுரைகள் எழுதி வாசித்து வெளியிட்டு வருகின்றனர்.
- நான்கு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளனர்.
- முனைவர். கஸ்தூரி ஜான்சன், குமரி மாவட்டம், புதினங்களில் சமூக நிறுவனங்கள் ஜுன் 2000.
- முனைவர். அ. தனலெட்சுமி, சிலப்பதிகாரத்தில் அணிக்கோட்பாடு, அக்டோபர் 2005
- முனைவர். தெ. வாசுகி, தமிழன்பன் கவிதைகளில் பெண்ணியம், அக்டோபர், 2006.
- இலக்கியத் தூறல்கள், மே 2009.
- துறைப்பேராசிரியர்கள் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முதுநிலை ஆய்வறிஞர் ஆய்வுகளுக்கு நெறியாளர்களாக செயலாற்றி வருகின்றனர்.
- மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன ஆணைப்படி 55 நூல்களைத் திறனாய்வு செய்துள்ளனர்.
Facilities
- Latest Books with reputed writters / Authors